மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் பாளையில் நடந்தது. கொல்லத்தை சார்ந்த டாக்டர் மனோகரன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சுந்தராஜன், கனிராஜ் தமிழரசி சௌந்தர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். மத்திய மாநில எசி.எஸ்.டியின் நெல்லை மாவட்ட தலைவர் அரிராம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இடஒதுக்கீடு நமது உரிமை என்ற தலைப்பில் டாக்டர் ராம்நாத் இட ஒதுக்கீடு ஒர் உளவியல் பார்வை எனும் தலைப்பில் டாக்டர் பன்னீர் செல்வன், இடஒதுக்கீடும் அரசியலமைப்பு சட்ட அங்கீகாரமும் எனும் தலைப்பில், சாதியவாத மதவாத கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபுஜீவா, இடஒதுக்கீடு புரிதல் ஆய்வு எனும் தலைப்பில் கோவை ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் ராமகுரு வைரமுத்துராஜ், பால்ராஜ், முத்துராஜன், ஈஸ்வரபாண்டியன், பாலாசங்கர், பேராசிரியர்கள் சித்தார்த்தன், செல்லப்பா, நாகூர்கனி மற்றும் வக்கில் பிரபு உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் நிறைவாக எல்.ஐ.சி முத்துசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment