நெல்லை பத்திரிகையாளர்கள் மீது
காவல்துறை வழக்கு பதிவு - இஸ்ரோ சம்பந்தப்பட்ட செய்திகளை புறக்கணிக்க நெல்லை மாவட்ட
அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் முடிவு
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே
அமைந்துள்ளது மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மிகவும் பாதுகாப்பு பகுதியான இந்த
மையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் பகுதியில் பாறை ஒன்று பிளவு பட்டிருப்பதாகவும், புகை வந்து கொண்டு இருப்பதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி
வள்ளியூர் செய்தியாளர் ராஜீகிருஷ்ணா, நெல்லை செய்தியாளர் நாகராஜன், பணகுடி தினகரன் பத்திரிகை செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்திகளை
அனுப்ப அது தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பிரசுரமானது.
இந்நிலையில் மையம் குறித்து அவதூறாக செய்தி
வெளியிட்டதாக பணகுடி காவல் ஆய்வார் ஜோன்ஸ் பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில்
இ.பி.கோ 469.505.507 ஐ.டி.பிசி 67 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதனை கண்டித்து வழக்கை திரும்ப பெற வேண்டும் இஸ்ரோ பாதுகாப்பு
அதிகாரிகளிடமும் கிராம மக்களிடமும் எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்த
காவல் ஆய்வாளர் ஜோன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை பத்திரிகையார்கள்
மன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள நெல்லை, குமரி, தூத்துகுடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 150 க்கும் மேற்பட்ட
பத்திரிகையாளர்கள்; நேற்று (29-09-2017) நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட
சென்றனர். அப்போது அவர்களை தடுத்த
போலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவருடைய செல்போன் உடைந்தது. போலிஸ் வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றிற்கு கொண்டு சென்றனர். பின்னர் டிஜஜி-யிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து
சென்றனர். அங்கு 1 மணி நேரத்துக்கும்
மேலாக பேச்சு வார்த்தை நடந்தது. முன்னாள் நெல்லை பத்திரிகையாளர் மன்ற
தலைவர் அய்.கோபால்சாமி தலைமையில் 10
செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை
நடத்தினர். பேச்சு வார்த்தை முடிவில் புகார்
கொடுத்தவர் காவல் ஆய்வாளாரை விட இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பிரிவில் பெரிய
பொறுப்பில் இருப்பதால் ஒரு நாள் அவகாசம் போலிஸ் தரப்பில் கோரப்பட்டது. பத்திரிகையாளர்களும் அதை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை
கைவிட்டனர். சென்னையில் பத்திரிகையாளர்கள்
டிஜிபியை சந்தித்து அவர்கள் எடுக்கும் முடிவுக்கு விட்டுவிடுவதாக தெரிவித்தனர். மேலும் இஸ்ரோ சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியையும் வெளியிட போவது
இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு மதிமுக பொது
செயலாளர் வைகோ உட்பட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.