திருநெல்வேலி மக்களுக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு
பஞ்சமில்லாத ஊர்,
என்று சொல்லலாம், ஆனால் அதனைத் தாண்டிய பொழுது
போக்கு அம்சங்களுக்கு அவர்கள் நாடியிருப்பது மாவட்ட அறிவியல் மையம், வஉசி மைதானம் மட்டுமே. அதையும்தாண்டி செல்ல வேண்டுமானால் குற்றாலம் செல்லலாம்.
அதனால்,
வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனம் சுற்றுலாவாசிகளின்
பொக்கிஷம் என்று சொல்லலாம். சுற்றுலா செல்ல விரும்புவோர், பாதுகாப்பான
பயணத்தை விரும்புவோர் இவரைத் தேடி வருகின்றார்கள். வாடிக்கையாளருக்கு தேவையானவற்றை
தேவைக்கு ஏற்ற வகையில் எடுத்து கொடுப்பதில் வாடிக்கையாளர் சேவை பிரிவிலும் மிக பணிவோடு
வாடிக்கையாளர்களை கவனித்து கொள்கின்றார்கள், இவரும் இவரது நிர்வாகமும்.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள
வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனம் விமான டிக்கெட், உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணம்,
ஆன்மீக பயணம், வாகன வசதி, ஹோட்டல் புக்கிங் என்று அனைத்து தரப்புகளும் புன்சிரிப்போடு செயல்படுத்தி வருகிறது.
விமான பயணச்சீட்டில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும், அதனுடைய
இழப்பு என்னவோ,நிர்வாகத்திற்கு மட்டுமே அமையும். வாடிக்கையாளருக்கு
அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலையில், எந்தவித
முக வருத்தமும் இல்லாமல் சந்தோசமாய் புன்சிரிப்போடு, இயல்பாக
பேசி, வாடிக்கையாளர்களை அமைதிப்படுத்தி அவர்களுக்குரிய பயணத்தை
இனிதாய் அமைத்து கொடுப்பதற்கு மிக அதிக பொறுமையும், நிதானமும்
தேவை. அந்த சேவையை செவ்வனே செய்து வரும் வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனத்தின் உரிமையாளர்
நம்ம ஊரு நாயகன் பஷீர் அஹமது அவர்களை இன்று நாம் சந்தித்து மயிலோசை இதழுக்காக உரையாடினோம்.
"நம்ம ஊரு நாயகன்" என்ற
தலைப்பில் இனி அவருடன் நடந்த உரையாடலை காணலாம்.
உங்களை பற்றிய அறிமுகம்....
வணக்கம். என் பெயர் பஷீர். நான் திருநெல்வேலியில் மேலப்பாளையத்தில்
பிறந்தேன். சொர்ணா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். முஸ்லீம்
மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு விரும்பி தேர்ந்தெடுத்தது. ஐடிஐ டீசல் மெக்கானில்
பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன். அப்பா லேபராக பணியாற்றினார். நான் 1982 இல் பிறந்தேன்.
திருமணத்திற்கு முன்னரே நான் வெளிநாடு சென்று விட்டேன். 2006 இல் திருமணம் நடைபெற்றது.
அதன்பிறகு அவர் வெளிநாடு சென்று இருபது வருடங்கள் பணியாற்றினார். அப்பா வெளிநாட்டில்
இருந்து வந்ததும் ஹார்ட்வர் கடை வைத்திருந்தார். அந்த கடையில் நானும் பணியாற்றினேன்.
அதன் பிறகு இதே டூரிஸ்ட் பணிகளில் எனது தாய்மாமா தான் எனக்கு குருநாதர் என்று சொல்லலாம்.
தாய்லாந்தில் அவர் தமிழ்ச்சங்கத்தில் அவர் இமாமாக இருந்தார். அவருடைய உறுதுணையில் நான்
இந்த துறையில் என்னை ஈடுபடுத்த தொடங்கினேன். அவருடைய உதவியாளராக அவரோடு களமிறங்கினேன்.
2001
முதல்
2006 வரை தாய்லாந்தில் தாய்மாமாவுடன் பணியாற்றினேன். 2007இல் அப்பா தவறி விட்டார்.
குடும்பச்சூழ்நிலை காரணமாக மீண்டும் இந்தியா வர வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்பாவின் தொழிலை நம்மால் ஈடு கொடுத்து பார்க்க
முடியாத சூழல் உருவானதாலும், தன்னுடைய அனுபவம் சுற்றுலாத்துறையில் இருந்ததாலும்
தான் 2007 மே மாதம் வெல்கம் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொடங்கினேன். இன்று அது வளர்ந்து
மூன்று கிளைகளாக உருவாகியுள்ளது.
ஐடிஐ டீசல் மெக்கானிக் படித்த நீங்கள் இந்த துறையை
தேர்ந்தெடுத்தது எப்படி?
ஆனால் டீசல் மெக்கானிக்காக பணியாற்றிய எனக்கு
அந்த டீசல் மற்றும் கெமிக்கல் உடல் மற்றும் தோல் அலர்ஜியாகவும் மருத்துவரின் அறிவுறுத்தல்
படி அந்த வேலையை விடவும் ஒரு காரணம்.
வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை
எப்படி எதிர்கொள்கின்கிறீர்கள்?
இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த துறையில்தான்
போட்டிகள் இல்லை,
நாம் நியாயமாக உழைத்தால் நமக்கு வரவேண்டிய வாடிக்கையாளர்கள் தானாகவே
தேடி வருவார்கள். யாருக்கும் நாம் நம்பிக்கை மோசடி செய்யவில்லை, வாடிக்கையாளர் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அந்த இடத்திற்கு நாம் டிக்கெட்டுகள்
பதிவு செய்து கொடுக்கின்றோம். மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று நான் சிந்திப்பதில்லை,
நான் என் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளரை எப்படி திருப்தி படுத்துவது
என்பது மட்டுமே சிந்திக்கின்றேன். போட்டிகளை பற்றி நான் கவலைப்பட்டதும் இல்லை.
தற்பொழுது உருவாகியுள்ள ஆன்லைன் சேவை உங்கள்
வர்த்தகத்தை பாதிக்கின்றதா?
நிச்சயமாக இல்லை. ஆன்லைன் சேவையில் இருக்கும்
பிரச்சினைகள் பெரும்பாலான மக்களுக்கு புரிவதில்லை. காரணம், ஆன்லைன்
சேவையில் டிக்கெட்டுகள் பதிவு செய்துவிடுவார்கள், நினைத்ததை நினைத்த
நேரத்தில் பதிவு செய்யலாம். ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில்
அவர்கள் தேதி மாற்ற வேண்டும் என்றோ அல்லது கேன்சல் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால்
அவர்கள் அதனை தேடி அலைந்தாலும் அதற்குரிய பதில் கிடைக்காது அல்லது மிகுந்த மனஉளைச்சலுக்கு
ஆளாவார்கள். அந்த பிரச்சினைகள் எங்களை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருக்காது.
பதிவு செய்யவோ அல்லது கேன்சல் செய்யவோ எங்களிடம் தாராளமாக செய்யலாமே. மனஉளைச்சலையும்
தவிர்க்கலாமே!
டூர்ஸ் பேக்கேஜ் தவிர வேறு என்ன பணிகள் உள்ளன?
ஏர் டிக்கெட்தான் பிரதானம், இது தவிர
பாஸ்போர்ட், ரயில் டிக்கெட், உள்ளூர் வெளியூர்
வாடகை வாகனங்கள், ஹோட்டல் புக்கிங் உள்ளிட்டவையும் செய்து தருகின்றேன்.
பாஸ்போர்ட் செர்வீஸ் மட்டும் இதுவரை 6000 நபர்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றேன்.
மற்ற டிராவல்ஸை காட்டிலும் உங்களின் சேவைக்கட்டணம்
அதிகமாக உள்ளது போன்று உள்ளதே?
நான் ஏற்கனவே சொன்னது போல மற்ற நிறுவனங்களை
நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. என்னுடைய சேவையில் நான் சரியாக இருக்கின்றேன். எனது
சேவைக்கேற்ற கட்டணத்தை நான் பெற்றுக்கொள்கின்றேன். எத்தனையோ முறை எங்களுக்கு இழப்புகள்
ஏற்பட்டிருந்தாலும் அதனை பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தோளில் அழுத்த மாட்டேன்.
சேவைக்கட்டணம் அதிகம் என்று வெளியில் சென்ற பலர் திரும்பி என்னிடம் வந்து என்னுடைய
சேவையில் திருப்தி பெற்று பலரை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இதுவே எனது
வெற்றிக்கு அறிகுறி. நான் சரியான கட்டணத்தைத்தான் நிர்ணயித்திருக்கின்றேன் என்று சொல்லலாம்.
உங்கள் நிறுவனத்தின் கிளைகள் வேறு எங்கும்
உள்ளதா?
வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை, மேலப்பாளையம்,
மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில்
கிளைகள் உள்ளது.
உங்களின் எதிர்காலத்திட்டம் என்ன?
எனக்கு ஒரு ஆசை என்னவெனில், குறைந்த
கட்டணத்தில் அனைவரையும் விமான பயணத்தை அனுபவிக்க வேண்டும், அவர்கள்
அனைவருமே அவர்கள் வாழ்நாளில் விமான பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அதற்கான சேவையில் எந்த விமான சேவை முன்வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து
அவர்களை பிரயாணம் செய்ய வைக்க வேண்டும் என்பதே. அது தவிர, இன்னும்
பல குடும்பங்களுக்கு எனது நிறுவனம் உதவிகள் செய்ய வேண்டும், அதற்கு
எனது வர்த்தகம் விரிவடைய வேண்டும், அதில் பல ஊழியர்களை நியமிக்க
வேண்டும்,
எங்களது மயிலோசை இதழ் பற்றி?
நிறைய நாளிதழ்கள் படித்திருக்கிறேன். ஆனால்
இது உண்மையிலேயே ஒரு வித்யாசமான முயற்சிதான் என்று நினைக்கின்றேன். மிக அற்புதமான தகவல்கள், வித்யாசமான
பேட்டிகள், பல்வேறு செய்திகளின் தொகுப்புகள் என்று பல விஷயங்களை
நேரில் சென்று களமிறங்கி சேவை செயகிண்றீர்கள். இதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு
எனது நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கின்றேன்.