திருநெல்வேலி பாளையங்கோட்டை கோபால சாமி கோயில்
எதிரில் 4 வருடமாக நடைபெற்று வரும் ஸ்ரீ கோமதி
ஹோட்டல் உரிமையாளர் திருமதி ராஜலக்ஷ்மி அவர்கள்.
தங்களின் அறிமுகம்:
என் பெயர் ராஜலக்ஷ்மி. திருநெல்வேலி பாளையங்கோட்டை
கோபாலசாமி கோயில் எதிரில் 4 வருடமாக ஸ்ரீ கோமதி
ஹோட்டல் நடத்தி வருகிறேன். கணவர் பெயர் ராஜசேகர், மகள் பெயர் வித்யாஸ்ரீ மதி.
உங்களுடைய அப்பா அம்மா
பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு பற்றி சொல்லுங்க.
அப்பா திரு. முத்துகிருஷ்ணன், Rtd. EB Worker. அம்மா திருமதி
லலிதா House
wife. உடன்
பிறந்தவர்கள் 6 பேர். அண்ணா : Engineer, தூத்துக்குடி. அக்கா : House Wife, அத்தான்
ரயில்வே ஊழியர். பள்ளி படிப்பு ஒரு கிராமம்
ஸ்ரீ குமரகுருபரர் பள்ளி. 12-ம் வகுப்பில்
பள்ளியில் முதல் மதிப்பெண். கல்லூரி மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி. B.Com.,
இந்த தொழிலில் உங்களுக்கு
முதுகெலும்பாக இருந்து உங்களுக்கு உதவிய நபர் யார்?
எனது சிறு வயது முதல் ஹோட்டல் வைத்து நடத்த
ஆசை உண்டு. அனால் வெளிக்காட்டியது இல்லை. பிறகு எனது கணவர் வியாதி பட்ட அந்நாட்களில்
நான் எதாவது ஒரு தொழில் செய்து ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயமான நாட்கள் வரும் போது
இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து தொழில் ஆரம்பித்தேன். எனது முதுகெலும்பாக உற்ற துணையாக இருந்து திறம்பட மிளிர
செய்ய எனக்கு உதவிய மிக பெரிய சக்தி தெய்வ
அனுக்ரகம்,
குரு நாதருடைய (ஸ்ரீ கோமதி தாசன், கல்லிடைக்குறிச்சி)
அனுக்ரகம் மட்டுமே. இதில் பெரிதும் உதவியது என் தந்தை. உன்னால் என்ன
முடியுமோ அதை செய்,
என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன் என்ற தன்னம்பிக்கையின் வார்த்தைகள்
பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது. என் சகோதர சகோதரிகளும் பொருளாதார ரீதியாக உதவி செய்தார்கள்.
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய முக்கியமான
ஊன்றுகோலாக இருந்தது எனது மகள் வித்யா ஸ்ரீ மதி. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் வரும்போது
என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று தொழில் ரீதியான ஆலோசனைகள் கொடுத்து பெரும்
உதவியாக செயல்பட்டாள். சென்னையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்காங்க. 194 மதிப்பெண்கள்
வைத்திருந்தார்கள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தெரிந்தெடுத்து படித்து இப்போது சென்னையில்
பணி செய்து வருகிறார்கள். படித்து கொண்டிருக்கும் போதே வேலைக்கு தெரிந்தெடுக்க பட்டு
அநேக அவார்ட்கள் வாங்கி பெருமை சேர்த்துள்ளாரகள். தொழில் விஷயங்கள் அநேகம் கற்று கொடுத்தது
என்னுடைய நண்பர் பெருமாள் அவர்கள். அவரிடம் இருந்து அநேக காரியங்களை கற்று கொண்டேன்.
மேலும் ஆதரவு அளித்தது திரு. லோகநாதன் அவர்கள்.
பள்ளி படிப்பு கல்லூரி
படிப்பு முடித்து பின்பு மனைவி அதன் பின்பு தாய்மை இந்த சந்தோசத்தை தாண்டி உங்க சிறு
வயது ஆசை நிறைவேறிய இந்த சந்தோசம் எப்படி உணருகிறீர்கள்? இந்த ஆசையின்
தூண்டுதல் என்ன?
ரெம்ப சந்தோஷம். ஆசை நிறைவேறியதன் காரணம்
குடும்ப சூழ்நிலை மட்டுமே.
இந்த தொழிலில் உங்களுடைய
இலக்கு என்ன?
அதை அடைந்து விட்டீர்களா? அல்லது முயற்சித்து கொண்டிருக்கிறீர்களா?
சூழ்நிலையின் காரணமாக ஆரம்பித்தேன். ஆனால்
நல்ல பெயர் சம்பாதித்து உள்ளேன். ஸ்ரீ கோமதி என்றாலே நல்ல தரம் என்ற நற்பெயர் கிடைத்துள்ளது. ஸ்ரீ கோமதி இன்டர்நேஷனல் ஆக்க வேண்டும் என்பது ஆசை.
கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் நடக்கும்.
ஹோட்டல் என்பது ஆண்கள்
எடுத்து நடத்தும் ஒரு தொழில். அனால் இந்த காலத்தில் அநேக காரியங்கள் பெண்களால் முடியும்
என்று சாதித்து காட்டுகிறார்கள். இருப்பினம் இந்த திருநெல்வேலி மாநகரத்தில் ஒரு பெண்ணாக
இருந்து இந்த தொழிலை ஆரம்பித்து 5-ம் ஆண்டு வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்றீங்க.
உங்க வெற்றிக்கு பின்னால் எத்தனை தடைகள், எத்தனை கஷ்டங்கள் அனுபவிச்சிருக்கீங்க?
தொழில் என்றாலே கஷ்டம் உண்டு. அனால் நான்
ஆரம்பிக்கும் போது எந்த தடையும் இல்லை. ஆரம்பித்த பிறகு என் உறவினர்கள் ஏன் இந்த தொழிலை
ஆரம்பித்தாய் என்று அநேக வார்த்தைகள் பேசினாங்க. இருப்பினும் அந்த வார்த்தைகளை தாண்டி
இவ்வளவு நாட்கள் நடத்தி விட்டேன். பொதுவாக உழைப்பு நேர்மை இந்த இரண்டையும் தாரக மந்திரமாக
வைத்து செயல்படும் போது தொழில் மென்மையாக நடைபெறும். குறிப்பாக பணம் சார்ந்த இலாபம்
அடைய எப்படி வேண்டுமானாலும் தொழில் செய்யலாம் என்ற எண்ணம் இல்லாமல் இப்படி தான் என்ற
ஒரு குறிக்கோள்,
ஒரு திட்டம் வைத்து செயல்பட்டால் சுலபமாக நடத்தலாம். அனால் தொழிலில் இப்படி மென்மை ஒருபக்கம் இருந்தாலும் கரடு முரடான
பாதைகள் இன்னொரு பக்கம் கண்டிப்பாக இருந்தே ஆகும். ஆனால் அதனை எதிர்கொள்ள தொடங்கி விட்டால் அந்த கரடு முரடு பாதையிலும் நமக்கு
இயற்கையாகவே வழி கிடைத்து விடும் என்பது உறுதி.
உங்கள் சிறு வயது ஆசை ஹோட்டல்
தொடங்கி பல தடைகளை வெற்றி படிகளாய் மாற்றி வந்துட்டீங்க. இப்போது உங்கள் இலக்கு அதாவது
ஸ்ரீ கோமதி இன்டர்நேஷனல் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை இருக்குதா? 4 வருடங்களுக்கு
முன்பு நீங்கள் தொடங்கிய இந்த தொழிலில் இப்போ உள்ள மாற்றங்கள் முன்னேற்றம் உள்ளதாக
இருக்கிறதா?
ஆரம்ப நாட்களில் 10-க்கு 10 என்ற அளவில்
ஒரு இடத்தில் தொடங்கினோம். நான் என்னோடு திரு. லோகநாதன் மற்றும் உதவிக்கு 2 பேர் வைத்து
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை வேலை
ஓய்வில்லாமல் வேலை செய்தோம். அந்த உழைப்பின் பலன் என்னவென்றால் இப்போது எனக்கு கீழ் 14 பேர் பணி செயகிறார்கள்.
மட்டுமல்லாமல் தொழிலும் லாபகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் விரிவடைந்து இன்னும்
சிறப்பாய் அமைய ஆசை படுகிறோம். அதற்கான முயற்சிகளையும் மேற்கோளாகிறோம்.
உங்கள் மகள் உங்கள் வெற்றிக்கு
ஆதரவாக இருப்பாங்களா?
நிச்சயம் 3 வருடம் சென்னையில் பணி செய்து
மீண்டும் என்னோடு வந்து உதவியாக இருப்பாங்க. பிற்கால வளர்ச்சிக்கு பெரிதும் ஊன்றுகோலாக
இருக்கப்போவது என் மகள் தான்.
ஆண் பெண் ஏற்ற இறக்கங்கள்
சமுதாயத்தில் இன்னும் இருக்கிறதா? உங்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்குது?
பெண் என்பதால் இந்த தொழிலில் எதாவது கஷ்டம் அனுபவிச்சது உண்டா?
கண்டிப்பாக இல்லை. இந்த தொழிலில் இருப்பதால்
சமுதாயத்தில் எனக்கு பிரச்னை என்று சொல்ல எதுவும் இல்லை. ஒருவேளை மற்றவர்களுக்கு இருக்கலாம்.
ஆனால் கடவுள் கிருபை அப்படி ஒரு கஷ்டம் எனக்கு இல்லை. ஒன்று மட்டும் உணர்கிறேன்.. எதாவது ஒரு பிரச்னை
வந்தால் ஒரு பெண் தான் இதை நடத்துகிறாள் ஆகவே இங்கு வீண் பிரச்னை வேண்டாம் என்று சொல்பவர்கள்
தான் நான் பார்த்திருக்கிறேன். இது எனக்கு மிக பெரிய வெற்றி. அப்படி ஒரு கஷ்டம் இருந்தால்
முன்னேறுவது ரெம்ப கஷ்டமான ஒன்று. இப்போ உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் எனக்கு சரீரத்தில்
எவ்ளோ வலி இருக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆகவே தொழிலில் வரும் கஷ்டத்தை
சமாளிப்பதை விட சமுதாயத்தில் வரும் கஷ்டத்தை சமாளிப்பது தான் மிக பெரிய கஷ்டம். அந்த கஷ்டத்தை
இறைவன் எனக்கு தரவில்லை. அந்த வகையில் நான் பாக்கியசாலி.
இந்த நிகழ்ச்சியின் மூலம்
நீங்க யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புறீங்க.
முதலாவது குரு நாதர், அடுத்த
படியாக என் பெற்றோர், என் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்றேன்.
குறிப்பாக தொழில் ரீதியாக ஆலோசணை தந்து உதவிய
எனது நண்பர் திரு. பெருமாள் அவர்களுக்கும் அனைத்து வேலைகளிலும் உடன் உதவியாக இருந்த திரு லோகநாதன் அவர்களுக்கும்
நன்றி சொல்றேன். திரு லோகநாதன் அவருடைய மனைவிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து
கொள்கிறேன். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு
குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும் தொழில் திறம்பட நடந்திட உழைத்திடும் உடன் ஊழியர்கள்
அனைவருக்கும் நன்றி.
நம்ம ஊர் நாயகர் நிகழ்ச்சி
பற்றிய தங்கள் கருத்து
ஒவ்வொரு ஊரிலும் அநேக கலைஞர்கள் இருக்கிறார்கள்.
அதில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய கடின உழைப்பின் அடிப்படையில் வாழ்க்கையில்
தொழிலில் முன்னேறிய கலைஞர்களை கண்டுபிடித்து அவர்களிடம் முன்னேற்றத்தின் காரணங்களை கேட்டு அறிந்து
அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்வது மிகுந்த சந்தோஷம். எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி "தாகத்தோடு இருப்பவர்களுக்கு
தண்ணீர் கிடைப்பது" போன்ற ஒரு சந்தோஷம். குறிப்பாக ஒரு
பூஸ்டர் போல் காணப்படுகிறது. ஆகவே எங்கள் மனமார்ந்த
நன்றி.