மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday 27 November 2017

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததானம் வழங்கினார்கள்



பிரபாகரனின் 63வது பிறந்த நாள் விழா நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததானம் வழங்கினார்கள்.


தமிழ் தேசிய இயக்க தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த நாள் விழா முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக இரத்ததானம் நடைபெற்றது. 

இம்முகாமிற்கு தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சக்திபிரபாகன், மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், மத்திய மாவட்ட மகளிரணி பாசறை செயலாளர் சுதாதர்மசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நாம் தமிழர் கட்சியை சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தாம் வழங்கினார்கள்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment