செங்குளம் கிராமத்தில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை சேவைப் பணி.
நெல்லை
வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல்
கல்லூரியைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள்
இணைந்து மத்திய அரசின் “தூய்மை சேவை” திட்டத்தின்
கீழ் செங்குளம் கிராமத்தில் டெங்கு
விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை சேவைப்பணிகளை மேற்கொண்டனர்.
இப்பணியினை கல்லூரி முனைவர் முதல்வர்
வி.இளங்கோவன் துவக்கி வைத்தார். டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை சேவை பணிகளை
மேற்கொள்வதன் பயன்பாடுகள் குறித்து ஸ்காட் கல்விக் குழுமங்களின் செயல் இயக்குநர்
திருமதி. மெனான்டஸ் மற்றும் பொது மேலாளர் (நிதி) திரு.இக்னேஷியஸ் சேவியர் மாணவ
மாணவியருக்கு எடுத்துரைத்தனர்.
மாணவ
மாணவியர் செங்குளம் கிராம சுகாதார அலுவலர்களுடன் இணைந்து பேரணி நடத்தியதோடு கிராம மக்களின் இருப்பிடங்களையும்; தன்னார்வத்துடன் சுத்தம் செய்து அவர்களுடைய வீடுகளை சந்தித்து
வீடுகளில் டெங்கு கொசுக்கள் வளரவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளைக் குறித்தும் தெளிவு படுத்தினர்.
இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி
திரு.எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment