மேலப்பாளையத்தில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் 46 வீடுகளை இடிக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை நீடித்து வருவதால்
மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தினமும் மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயண்நாயர் தலைமையில் அதிகாரிகள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 28, 37 மற்றும் 38ஆவது வார்டுகளில் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் ஓடு, கூரை வீடுகளை மாநகராட்சி உதவி ஆணையர் கவிதா தலைமையில்அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில்மேலப்பாளையம் ஷெய்குல்அக்பர் தெரு, விளாகம், உள்பட பல்வேறு பகுதியில் இடிந்து விழும் நிலையில்காணப்பட்ட 46 வீடுகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
பழுடைந்த வீடுகள், கட்டடத்தை மாநகராட்சி அறிவிப்பு கிடைத்த 2 நாள்களில் அப்புறப்படுத்த வேண்டு ம். தவறும்பட்சத்தில் மாநகராட்சி சட்டப்பிரிவு 327இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment