அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்து
மாரடைப்பால் மரணமடைந்த பாளை ராணுவவீரர் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது..
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி நகர், ஐயப்பா நகரைச்சேர்ந்த ராஜேஷ் (35), இந்திய
இராணுவத்தில் சிப்பாய் ஆக அசாம் மாநிலத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த 2ம் தேதி
பயிற்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் பாளை கே.டி.சி நகரில் முழு
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.. இறந்த இராணுவ வீரர் ராஜேஷ்க்கு தீபா
என்ற மனைவியும், விக்கேஷ் (3), ஆதேஷ் என்ற ஒன்றறை வயது மகன்களும் உள்ளனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment