நெல்லையில் மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய இஸ்லாமியர் சாதனை நிகழ்த்தினார். புதுதில்லி
இன்டர்நேஷனல் நேச்சுரோபதி மற்றும் கடையநல்லூர் இன்டர் நேசனல்
பள்ளி சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் நிகழ்ச்சி நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் இன்டர் நேசனல் பள்ளி தாளாளர் முகம்மது ஹபீபுயோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய சாதனை புரிந்தார். முன்னதாக சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாக்கியராஜ் வரவேற்று பேசினார்.
சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக நிறுவன தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை
நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் ஐ.எஸ்.ஐ.கராத்தே குங்ஃபூ கழக நிறுவனர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாககடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர் கமரூதீன் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment