நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட காரியாண்டி
அரசு பள்ளியில் திருநெல்வேலி ரோட்டரி கழகம்
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல்
குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ
மாணவிகளின் பேரணி நடைபெற்றது.
இந்த ஊர்வலம்
காரியாண்டி நகரின் முக்கிய சாலைகளுக்கு சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படும் வண்ணம் மாணவ மாணவிகளின் கோஷத்துடன் சென்றது.
இதை தொடர்ந்து அப்பள்ளி மாணவ ,மாணவிகள் பத்தாம்
வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் இடம்
பெற அறிவுறுத்த பட்டது. தொடர்ந்து
திருநெல்வேலி ரோட்டரி கழகத்தின் சார்பில் மாணவ ,மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி கைடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் காந்தி, உதவி
தலைமையாசிரியர் சுந்தரகுமார்,
திருநெல்வேலி ரோட்டரி கழக நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஆவுடையப்பன், சிவா உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. பரமசிவன்.
No comments:
Post a Comment