தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம் கொண்டாடப்பட்டது. மழலையர்கள் வானவில்லின்வண்ணமான ஏழு வண்ணங்களில் ஆடைகளை அலங்கரித்துக்கொண்டு வலம் வந்து வானவில்லின் பிரதிபலிப்பைகொண்டுவந்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதிஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மழலையர்களின வானவில் தோற்றத்தைப்பார்த்து வியந்து கூறுகையில் நமது தட்பவெட்ப நிலைகளில் வானவில் தோன்றுவது ஒருவகை காலத்தை குறிக்கிறது. பொதுவாக மழைக்காலங்களில் இது எவ்வாறு தோன்றும் என்ற இயற்பியல் சோதனைகளும் நடத்தப்பட்டு வானவில்லின் வண்ணங்களின் விப்ஜிஆர் வரிசைகளையும் உருவாகும் விதத்தையும் எடுத்துரைத்தார். இதில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள்கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment