உலக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நெல்லையில் பாரதியார் சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லையில் உள்ள பாரதியார் சிலைக்கு
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாநில
துணைத்தலைவர் பரமசிவம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை மதுரை
திரவியம் தாயுமானவர் இந்து மேனிலைப்பள்ளியில் பாரதியார் பயின்ற பள்ளி வகுப்பறையில்
மாணவ-மாணவிகளுக்கு பத்திரிகையாளர்களின் பணியின் முக்கியத்துவம், பாரதியார்
பத்திரிகையில் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
தமிழ்நாடு உழைக்கும்
பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவம் கூறியதாவது... தொடர்ந்து
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். புத்திரிகையாளர்களுக்கு தமிழக
அரசின் ஓய்வுதிய பலன்கள்,அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
சங்கத்தின் மாநில துணைத்தலைவர்
பரமசிவம், தென்மண்டல அமைப்பு செயலாளர் பாரதிராஜன், நெல்லை மாவட்ட
தலைவர் முருகன், வணக்கம் இந்தியா சங்கரகுற்றாலம்,மாலை முரசு டிவி செல்வம், தினச்சூரியன்
செல்வம், மாலைதமிழகம் சுப்பிரமணியன், ஈநாடு நெல்லை முத்து, மயூரி டிவி ஹரி, விண் டிவி சரவணன், வெளிச்சம் டிவி
ரீட்டாஅருள், உட்பட பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment