மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 33வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது





நெல்லையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு கொக்கிரக்குளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான செல்லபாண்டியன் பவனத்தில் இந்திராகாந்தி உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வேல்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இந்நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் வானுமாமலை, முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதிசிவன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்
திரு. முத்து.


No comments:

Post a Comment