நெல்லையில் முன்னாள்
பிரதமர் இந்திராகாந்தியின் 33வது
நினைவு நாளை முன்னிட்டு கொக்கிரக்குளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான
செல்லபாண்டியன் பவனத்தில் இந்திராகாந்தி உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வேல்துரை மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் வானுமாமலை,
முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதிசிவன், மாவட்ட
பொருளாளர் ராஜேஷ்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்,
மண்டல தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட
காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment