நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கவும் நெல்லை கலெக்டர்
அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில ஈடுபட்டு உள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் அங்குபணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கு ஏற்கனவே பிரதான வாசல்கள் உள்பட மொத்தம் 10 வழிகள் இருந்தன. இதில் 3 வழிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அடைத்து விட்டனர். பிரதான வாசல் மற்றும் தபால் அலுவலகம் அருகே உள்ளவாசல்களின் வழியாக மட்டும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்து வருகிறார்கள். இந்த 2 வாசல்களிலும்பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment